Search This Blog

Saturday, 10 May 2014

அன்பே என் இயேசுவே ஆருயிரே


பல்லவி
அன்பே என் இயேசுவே ஆருயிரே
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

சரணங்கள்
1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்

Friday, 9 May 2014

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு

உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா


உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
உள்ளம் பாரத்தாலே சிதறியதே
உம் பாசக்கரம் நீட்டினீரே

அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே
என் விண்ணப்பத்தை கேட்டவரே
என் கண்ணீரை காண்பவரே

உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்


பல்லவி

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்
மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்
கர்த்தரை மகிழ்ச்சியோடே பாடுங்கள்
சரணங்கள்

1. கீர்த்தனம் பண்ணுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
நியாயமாய் நடவுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
ஏழைக்கு இரங்குங்கள் இயேசுவுக்குப் பிரியம்
தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

2. ஆனந்த பலிகள் கர்த்தருக்குப் பிரியம்
வாசலில் துதிகள் கர்த்தருக்குப் பிரியம்
துதி கனம் புகழ்ச்சியும் கர்த்தருக்குப் பிரியம்
எந்நேரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்குப் பிரியம்

3. உத்தமனாய் வாழ்வது தேவனுக்குப் பிரியம்
நன்மையைச் செய்வது தேவனுக்குப் பிரியம்
பாவத்தை வெறுப்பது தேவனுக்குப் பிரியம்
பரிசுத்தம் காப்பது தேவனுக்குப் பிரியம்

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா --- புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்

குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் --- புதிய

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா - (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) --- புதிய

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க - (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) --- புதிய

பிதாவே போற்றி, குமாரன் போற்றி


பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி - (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் - (2) --- பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் - (2) --- பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் - (2) --- பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் - (2) --- பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் - (2) --- பிதாவே

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தோரையா
கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா - (2)
எந்தன் இயேசுவே - (4)

தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா - (2)
எந்தன் இயேசுவே - (4)

தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் - (2)
எந்தன் இயேசுவே - (4)

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்


பல்லவி

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே
சரணங்கள்

1. மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

துயரத்தில் கூப்பிட்டேன்

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா - (2)
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் - (2)

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2)

2. எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் - (2)
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை - (2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2)

3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா - (2)
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா - (2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2)

4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் - (2)
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
அடைக்கலமே புகலிடமே – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதே இல்லை – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

தேவா நான் எதினால் விசேஷித்தவன்


பல்லவி

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
அனுபல்லவி

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்
சரணங்கள்

1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே --- தேவா

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் --- தேவா

3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு --- தேவா

தெய்வத்துவத்தின் பரிபூரணம்


தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்

1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- அவரோடு

2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- சொல் செயல்

3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- ஜெப தூபம்

தேவ சித்தம்


தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே - (2)

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கேன்றே
சாட்சியாய் முடித்திடுவார்

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்

சிலுவை நாதர் இயேசுவின்


சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம்
காயங்களையும் பார்க்கின்றன

1. என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீயவழியில் என் கால்கள் சென்றதால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

2. தீட்டுள்ள எண்ணம் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

3. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார்

4. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

சந்தோஷமாயிருங்க


பல்லவி

சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
சரணங்கள்

1. நெருக்கத்தின் நேரத்திலும்
தண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்

4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே

6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்

1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்

2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்
வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்

3. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோழ்களில் என்னை சுமந்து செல்லும்
தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்

கர்த்தாவே என் பெலனே

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே


1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

Thursday, 8 May 2014

பெலன் ஒன்றும் இல்லை தேவா


பல்லவி

பெலன் ஒன்றும் இல்லை தேவா
ஆவியால் பலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
சத்துவம் தந்தருளும்
சரணங்கள்

1. சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்
சோதனை ஜெயிக்க பெலன் தாரும்
மாய உலகினை வெறுக்க
என்னையும் பெலப்படுத்தும் --- பெலன்

2. மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் திடப்படுத்தும் --- பெலன்

பூரண அழகுள்ளவரே


பல்லவி

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
அனுபல்லவி

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
சரணங்கள்

1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே --- போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே --- போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் --- போற்றுவேன்

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2)
இந்தியாவை தாருமே

1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும்

2. கோடி கோடி மக்களுண்டு - (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்

பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

பிரியமானவனே


பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பலிபீடத்தில் வைத்தேன் என்னை

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - (2)

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
நித்தம் வழிநடத்தும் - (2)

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - (2)
வாருமய்யா வந்து என்னை - (2)
வல்லமையால் நிரப்பும் - (2)

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - (2)
பரிசுத்தமாக்கி விடும் - (2)

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம்

2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம்

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்

தொடும் என் கண்களையே

1. தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக்
கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப்
பாட வேண்டுமே

தொடும் என் ஆன்மாவை
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம்
போக்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

3. தொடும் என் மனதினையே
மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள்
ஆற வேண்டுமே

தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள்
தீர வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

துதியுங்கள் நம் தேவனை


துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)

1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்