Search This Blog

Saturday, 31 October 2015

அப்பா பிதாவே அன்பான தேவா

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி - 2

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

5. ஒன்றை நான் கேட்டேன்
அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன் – நன்றி

Appa Pidave anbana deva
Arumai ratchakare aviyanavare

1.Engo nan vaalnden ariyamal alainten
En nesar teti vantir
Nenchara anaiththu muththangal koduththu
Nilalai Maarivitteer

Nandri umakku nandri (2) – appa

2.talmaiyil irunten tallati natanten
tayavay ninaivu kurntir
kalankate enru kannirait tutaittu
karamparri natattukirir

nanri umakku nanri (2) – appa

3.ulaiyana cerril valnta ennai
tukki etuttire
kalvar irattam enakkaka cinti
kaluvi anaittire

nanri umakku nanri (2) – appa

4.iravum pakalum aiya kuta iruntu
ennalum kappavare
maravata teyvam marata necar
makimaikkup pattirare

nanri umakku nanri (2) – appa

Friday, 30 October 2015

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே

1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்

3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்

4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்

5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம

Thursday, 29 October 2015

என் ஜனமே மனந்திரும்பு

என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்

2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர

3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே

4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

Wednesday, 28 October 2015

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே

1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்

3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்

4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்

5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம

Tuesday, 27 October 2015

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்அவர் இரத்ததாலே

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த

3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூரந்து மகிழ்ந்திருப்பேன் – நான்

4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன

Monday, 26 October 2015

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Sunday, 25 October 2015

எனது மணவாளனே என் இதய ஏக்கமே

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)

4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக