Search This Blog

Saturday 13 November 2010

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
என் ஏசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவர் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான் – ஏறுகின்றார்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறுகின்றார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறுகின்றார்

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறுகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறுகின்றார்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே! எருசலேமே
என்றழுதார் கண்கலங்க – ஏறுகின்றார்
 
 

இந்தப் பாடல் கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும் திருவிருந்து நேரங்களில் படப்படுகிற பாடல் ஆகும்.இந்தப் பாடலை நாம் உள்ளம் உருகிப் பாடும்போது ஆண்டவரின் பாடுகளை நேரின் கண்டு வர்ணிக்கிற அனுபவம் நமக்கு உண்டாகிறது.

ஒரு சமயம் பேருந்து ஒன்று மலைமீது வளைந்து வளைந்து ஏறிச் செல்கிறது. அந்தப் பேருந்தில் அதிகமானவர்கள் பயணம் செய்ததால் அப்பேருந்து மலமீது ஏறுவதற்கு சிரமப்பட்டு தள்ளாடி தடுமாறி செனுகொண்டிருக்கிறது. அப்பேருந்தில் பயணம் செய்த சகோதரி சாரோள் நவ்ரோஜி அவர்கள் மலையில் பேருந்து ஏறிச்செல்லும் அழகை கண்டு களித்து இயற்கையுடன் கலந்து அதை ரசிக்கிறார். அந்தவேளையில் தான் அவர் பேருந்து மலைமீது ஏறுவதற்கு சிரமப்படுவதை கவனித்து அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவன் அவருக்கு இயேசு கொல்கொதா மலையில் தள்ளாடி தவழ்ந்து ஏறிச்செல்வதை தரிசனமாக காண்பித்தார். அதைக் கண்டவுடன் சகோதரியின் கண்களில் இருந்த் கண்ணீர் தாரைதாரையாகப் புறப்பட்டது.பேருந்து மலைமீது ஏறிச்செல்கிறது. சகோதரியோ இயேசு மலை மீது ஏறிச்செல்வதை தரிசித்துக் கொண்டு தன் அழுகையை அடக்கமுடியாதவர்களாக அழுதவண்ணமாய் பயணம் செய்கிறார். அப்பயணத்தின் விளைவாக அவர் பெற்ற தரிசனம் ஒரு அருமையான பாடலை நமக்குப் பெற்றுத்தந்தது.
நீங்களும் அந்தக் காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள். இயேசுவின் பாடு நிறைந்த, தாங்கொணா வேதனை நிறை கொல்கொதா பயணம். இயேசு சிலுவையின் பாரத்தினால் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் பாவபாரத்தினாலும் தள்ளாடி தளர்ந்து கீழே விழுந்த அந்த காட்சி.... ஓ இயேசுவே.... நன்றி.

1 comment:

  1. பாடல்கள் வரலாறு எடுத்த பக்கத்தின் லின்க் ஐயும் குடுத்திருந்தால் நலமாயிருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    ReplyDelete