Search This Blog

Saturday, 15 March 2014

வானாதி வானங்களில்


வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

1. தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?

2. தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?

3. உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

No comments:

Post a Comment