உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (2) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே
No comments:
Post a Comment