பல்லவி
 நான் உம்மை மறந்தாலும் - நீர்
 என்னை மறப்பதில்லை
 என் நேசர் இயேசுவே நீர் 
 எனக்கு போதுமே 
சரணங்கள்
 1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
 தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
 உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
 உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான்
 2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
 தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
 வேத வசனமே என் பாதைக்கு தீபமே
 முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான்
 3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
 உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
 உந்தன் கிருபையே எனக்கு போதுமே
 என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்
No comments:
Post a Comment