சொந்தம் என்று சொல்லிக் கொள்ள 
 உம்மை விட யாரும் இல்ல 
 சொத்து என்று அள்ளிக் கொள்ள
 உம்மை விட ஏதும் இல்ல 
 இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே
 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் 
 உம் வார்த்தையினால் நான் பெலனானேன் ...
 நான் பெலனானேன், நான் பெலனானேன்
 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் 
 உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் ... 
 நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்
 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன் 
 உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் ...
 நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்
No comments:
Post a Comment