எழுதியவர் : காபிரியேல் உபதேசியார்
பூரிகல்யாணி
தாளம் : ஆதிதாளம்
பூரிகல்யாணி
தாளம் : ஆதிதாளம்
- பல்லவி
- ஆதி்பிதாக் குமாரன் - ஆவி திரியேகர்க்கு
- அனவரதமும் தோத்திரம் - திரியேகர்க்கு
- அனவரதமும் தோத்திரம்
- அனுபல்லவி
- நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
- நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
- நிறைந்த சத்திய ஞான மனோகர,
- உறைந்த நித்திய வேத குணாசர
- நீடு வாரி திரை சூழு மேதினியை
- மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் --- ஆதி
- சரணங்கள்
- 1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
- என்றென்றைக்கும் பணிபாதர்,
- துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
- சோதனை செய் அதி நீதர்
- பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
- பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
- பண்பதாய்க யம்பு விவேகன்,
- அன்பிரக்கத யாளப்பிரவாகன்
- பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
- பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் --- ஆதி
- 2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
- நீணிலத்தில்லாமல் அழிந்து,
- தீதறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
- தேவ திருவுளம் உணர்ந்து,
- பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
- பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
- பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
- இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
- பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
- சூரியன் முன் இருள் போலவே சிதறும் --- ஆதி
No comments:
Post a Comment