Search This Blog

Saturday, 29 August 2015

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய

No comments:

Post a Comment