Search This Blog

Saturday, 14 May 2016

உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே-உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்த நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்

3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு

4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

No comments:

Post a Comment