Search This Blog

Saturday, 5 December 2015

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள
முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

Friday, 4 December 2015

இடைவிடா நன்றி உமக்குத்தான

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

In English

Idaivida Nandri Umakku Thane
Inai illa devan umakkuththan

1. Enna nadanthaalum nandri iyaaa
Yaar kai vittaluym nandri iyaaa

Nandri… Nandri… Idaivida nandri

2. Theedi vantheere nandri iyaa
Therinththukondeere nandri iyaa

3. Nimmathi thaththeere nandri iyaa
Niranthamaaneere nandri iyaa

4. Ennai thudaiththeere nandri iyaa
Kanneer thudaiththeere nandri iyaa

5. Neethi devane nandri iyaa
Vetri venthane nandri iyaa

6. Anaathi devane nandri iyaa
Arasaalum deivame nandri iyaa

7. Nithiya raajaave nandri iyaa
Saththiya theepame nandri iyaa

Thursday, 3 December 2015

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா

வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்

2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா

3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து
என்றும்
பண்பாடி மகிழணுமே

4. உலகம் எங்கிலும் சுவைத்தரும்
வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே

5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

Wednesday, 2 December 2015

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2

1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று

2. பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு

3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு

4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்
நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா

5. கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து
போச்சு..என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Tuesday, 1 December 2015

அனைத்தையும் செய்து முடிக்கும்

அனைத்தையும் செய்து முடிக்கும்
ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான்
மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்
எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் பொன்னாக
துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்
கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Monday, 30 November 2015

கர்த்தர் கரம் என் மேலங்க

கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க

1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்

2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்

3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்

5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்

6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க

Sunday, 29 November 2015

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி
முறியடிப்பேன்

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார