Search This Blog

Saturday, 15 March 2014

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்


விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உன்னைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உன்னை வரவேற்க ஆ…

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வின் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ

2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்தான்
தாவீதின் நகரில் மாமரி மடியில்
மாபரன் பிறந்துள்ளார்
நின் பாதம் தொழுதிட வந்தோம்
எம் தாகம் தீர்ப்பாயோ

3. கன்னித்தாயும் அவளது மடியில்
உன்னைத் தாலாட்ட
பன்னிரு நாளாய் காத்து
நிற்கும் உவலயம் உனை வணங்க
எம் வாழ்வின் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ

No comments:

Post a Comment